செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2020-11-29 04:25 GMT   |   Update On 2020-11-29 04:25 GMT
தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள சின்னபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 22). இவருடைய உறவினர் ஒருவரின் வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணேசன் அங்கு சென்று மின் விளக்கை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கணேசன் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News