உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது

Published On 2022-01-11 11:21 GMT   |   Update On 2022-01-11 11:21 GMT
பாளை அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

பாளை அருகே உள்ள சிவந்திப்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முத்தூர் பகுதியில் ஒரு டிப்பர் லாரியில் மணல் கொண்டு வந்தது தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும் மணலை, அனுமதி இல்லாமல் மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் மணல் கடத்திய முறப்பநாடு அகரம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம் (வயது 46) என்பவரை கைது செய்தனர். 

மேலும் மணல் கடத்திய டிப்பர் லாரி, மணல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News