செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா பாதிப்பு- பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Published On 2021-05-15 07:14 GMT   |   Update On 2021-05-15 14:53 GMT
கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,77,284  ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 110 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,596 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,62,631 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14,225 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.08 சதவீதமாக உயர்ந்துள்ளது.



இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.
Tags:    

Similar News