செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா

Published On 2021-04-05 08:30 GMT   |   Update On 2021-04-10 10:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 268 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 250 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News