செய்திகள்
ராமநாதபுரத்தில் 10 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்
ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் நேற்று 10 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் பருவகால காய்ச்சல் ஏராளமானோருக்கு பரவி வருவது தெரிந்ததே.
இந்நிலையில் ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் நேற்று 10 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறுவன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.