செய்திகள்
மின்சார நிறுத்தம்

சின்னசேலம், தியாகதுருகம், நாகலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2021-11-23 12:03 GMT   |   Update On 2021-11-23 12:03 GMT
சின்னசேலம், தியாகதுருகம், நாகலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் தாலுகா பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூர், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூர், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூர், சின்னசேலம் (காந்திநகர்) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நாகலூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாகலூர், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி, கொங்கராயபாளையம், பட்டி, உச்சிமேடு, உடைய நாச்சி, முகமதியர்பேட்டை, கூத்தக்குடி, ஐவதுகுடி, வரஞ்சரம், வேளாக்குறிச்சி, ஈய்யனூர், ஒகையூர், பொரசக்குறிச்சி, கனங்கூர், விருகாவூர், முடியனூர், சாத்தனூர், மலைக்கோட்டாலம், விளம்பாவூர், சித்தலூர், வேங்கைவாடி, குடியநல்லூர், வானவரெட்டி, லட்சியம், நிறைமதி, நீலமங்கலம், தண்டலை, பெருவங்கூர், ஆ.மரூர், சேதுவராயன்குப்பம் ஆகிய பகதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்சார வாரியத்தின் கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ. பாளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News