செய்திகள்
மணிஷ் சிசோடியா

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று

Published On 2020-09-14 15:39 GMT   |   Update On 2020-09-14 15:39 GMT
டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
டெல்லியில் குறையத் தொடங்கிய கொரோனா தொற்று தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி மாநில துணை முதல்வரான மணிஷ் சிசோடியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மணிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதனால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். முடிவில் பாசிட்டிவ் என வந்ததால், நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு டுவிட்டரில் ‘‘தற்போதைய நிலையில் எனக்கு காய்ச்சல் இல்லை. மற்ற எந்தவிதமான கஷ்டமான நிலை இல்லை. முற்றிலும் நன்றாக இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துக்களால் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News