செய்திகள்
சேத்துப்பட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது
சேத்துப்பட்டில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களுடன் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சேத்துப்பட்டு பஸ் நிலையம் அருகே ஆரணி சாலையில் சென்றபோது போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கெபாண்டிருந்தவர் நழுவ முயன்றார். அவர் வைத்திருந்த பேக்கை போலீசார் சோதனை செய்தனர். அதில் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்ய்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இது தொடர்பாக வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.