செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கிராமப்பகுதிகளில் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட நடவடிக்கை- அதிகாரி தகவல்

Published On 2021-06-28 05:50 GMT   |   Update On 2021-06-28 05:50 GMT
தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட வாய்ப்பு அளித்தால் கிராமமக்கள் அருகிலுள்ள இம்மாதிரியான ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட முன்வருவார்கள் என மத்திய அரசு கருதுகிறது.
விருதுநகர்:

மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை வேகப்படுத்தி உள்ளது. 3-ம் அலை தாக்கம் இருக்கும் என்று பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் கூறி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதற்குள் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனாலும் கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது.

அதற்கு காரணம் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து தடுப்பூசி போட வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி கிராமப்பகுதிகளில் ஒரு டாக்டர் பணியாற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட வாய்ப்பு அளித்தால் கிராமமக்கள் அருகிலுள்ள இம்மாதிரியான ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட முன்வருவார்கள் என மத்திய அரசு கருதுகிறது.

இதன் மூலம் கிராம மக்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட முன்வரும் நிலை ஏற்படும். எனவே இதற்cகான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தற்போதுள்ள நிலையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் கிராமப்புறங்களில் உள்ள இம்மாதிரியான ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டால் கட்டணமில்லாமல் கிராமப்புற மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்யும்.


Tags:    

Similar News