உள்ளூர் செய்திகள்
பீச் வாலிபால் போட்டி கடற்கரை திருவிழாவில் பீச் வாலிபால் போட்டியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

பீச் வாலிபால் போட்டி

Published On 2022-04-15 04:46 GMT   |   Update On 2022-04-15 04:46 GMT
கடற்கரை திருவிழாவில் பீச் வாலிபால் போட்டியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

தமிழ் புத்தாண்டையொட்டி   புதுவை சுற்றுலாத்துறை சார்பில் முதல்முறையாக கடற்கரை திருவிழா 4 நாட்கள் நடத்தப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக பாண்டி மெரினா கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி தொடங்கியது.

போட்டியை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

போட்டியில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 25 ஆண்கள் அணியும், 12 பெண்கள் அணியும் பங்கேற்றனர். போட்டியின் நிறைவு விழா நாளை (சனிக்கிழமை )நடக்கிறது. விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்க்கப்படுகிறது.
Tags:    

Similar News