செய்திகள்
சஞ்சய் ராவத்

புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களை வைத்து பாஜக சிவசேனாவை குறிவைக்கிறது - சஞ்சய் ராவத்

Published On 2021-08-03 22:49 GMT   |   Update On 2021-08-03 22:49 GMT
சிவசேனாவை எதிர்த்தவர்கள் அரசியலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மும்பை:

பா.ஜ.க. எம்.எல்.சி. பிரசாத் லாட் சமீபத்தில், தேவைப்பட்டால் மும்பையில் உள்ள சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனை தகர்ப்போம் என கூறினார். இவர் தேசியவாத காங்கிரசில் இருந்தவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு தான் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

இந்நிலையில், கட்சியில் புதிதாகச் சேர்ந்தவர்களை வைத்து, பா.ஜ.க. சிவசேனாவை குறிவைக்கிறது என சஞ்சய் ராவத் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எங்களை குறிவைக்க மகாராஷ்டிரா பா.ஜ.க.வில் புதிதாகச் சோ்ந்தவர்களின் உதவியைப் பெற்று இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆட்சியில் பங்கு கிடைக்கும் என சிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். தற்போது பா.ஜ.க. ஆட்சியில் இல்லாததால் அவர்கள் பதற்றத்தில் உள்ளனர் என்றார்.
Tags:    

Similar News