ஆன்மிகம்
கல்லக்குடியில் ஒரே நாளில் 9 வாகனத்தில் கோதண்டராமர் வீதிஉலா

கல்லக்குடியில் ஒரே நாளில் 9 வாகனத்தில் கோதண்டராமர் வீதிஉலா

Published On 2021-03-15 07:17 GMT   |   Update On 2021-03-15 07:17 GMT
கல்லக்குடி கோதண்டராமர் கோவில் ஏகதின பிரம்மோற்சவத்தையொட்டி 9 வாகனங்களில் கோதண்டராமர் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கல்லக்குடியில் உள்ள டால்மியா சிமெண்டு ஆலை குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் ஆண்டு தோறும் ஏகதின பிரமோற்சவத்தையொட்டி சாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் நேற்று ஏக தின பிரமோற்சவத்தையொட்டி ஒரே நாளில் காலை முதல் இரவு வரை சூரிய பிரபை வாகனம், சேஷ வாகனம், இந்திர விமானம், அனுமந்த வாகனம், யானை வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், சந்திர பிரபை வாகனம், கருட வாகனம் ஆகிய 9 வாகனங்களில் கோதண்டராமர் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News