செய்திகள்
144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் இன்று மதியம் முதல் 144 தடை உத்தரவு

Published On 2020-08-04 08:57 GMT   |   Update On 2020-08-04 08:57 GMT
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு, கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியில் இன்று மதியம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்த விழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு, கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியில் இன்று மதியம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்புர்கி நகர போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற உள்ள பூமி பூஜையை முன்னிட்டு, கல்புர்கியில் இன்று மதியம் 3 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு ஆகஸ்டு 6ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News