செய்திகள்
கைது

புன்னம்சத்திரம் அருகே வீட்டில் மது விற்றவர் கைது

Published On 2021-09-13 10:19 GMT   |   Update On 2021-09-13 10:19 GMT
புன்னம்சத்திரம் அருகே வீட்டில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

புன்னம்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன் பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பெரியரெங்கம் பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 6 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News