செய்திகள்
தீபக் ஹூடா

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் படைத்த தீபக் ஹூடா

Published On 2021-04-12 17:24 GMT   |   Update On 2021-04-12 17:24 GMT
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தீபக் ஹூடா 20 பந்தில் அரைசதம் விளாசினார்.
மும்பை வான்கடே மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் ரன்குவிப்பிற்கு தீபக் ஹூடாவின் அதிரடியும் முக்கிய காரணம். அவர் 20 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரர் ஒருவர், 23 பந்திற்குள் இரண்டு முறை அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தொடர்ந்து விளையாடிய தீபக் ஹூடா 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Tags:    

Similar News