செய்திகள்
கோப்புபடம்

சங்கராபுரம் அருகே வாலிபர், தீக்குளித்து தற்கொலை

Published On 2021-01-12 14:02 GMT   |   Update On 2021-01-12 14:02 GMT
சங்கராபுரம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்காணி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் செல்வதுரை(வயது 30). நெல் அறுவடை எந்திர டிரைவர். மது குடிக்கும் பழக்கம் உடைய இவர் குடு்ம்பத்தை சரியாக கவனிப்பதில்லை என கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று செல்வதுரையின் மனைவி பிரியா(22) அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த செல்வதுரை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News