ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நாளை நடக்கிறது

Published On 2020-12-17 03:46 GMT   |   Update On 2020-12-17 03:46 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு திருவிழாவின் 15-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நடக்கிறது.
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்க உரை போன்றவை நடக்கிறது. மணக்கரையைச் சேர்ந்த சிவலிங்கம், காட்டுவிளையை சேர்ந்த டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் திருஏடு வாசிக்கிறார்கள். அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் விளக்க உரை ஆற்றுகிறார்.

திருஏடு வாசிப்பு விழா 20-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. 15-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். 20-ந்தேதி பட்டாபிஷேக விழா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் தலைமை தர்மகர்த்தா பாலசுந்தரம் மற்றும் தர்மகர்த்தா செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News