உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.77 அடியாக உயர்வு

Published On 2022-04-16 03:35 GMT   |   Update On 2022-04-16 03:35 GMT
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1735 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 2 ஆயிரத்து 36 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 2 ஆயிரத்து 47 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிது.

நேற்று 104.76 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 104.77 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News