உள்ளூர் செய்திகள்
தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடை பெற்ற போது எடுத்த படம்.

தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்

Published On 2022-05-07 10:12 GMT   |   Update On 2022-05-07 10:12 GMT
கந்தர்வகோட்டையில் பேரிடர் காலங்களில் செயல் படும் முறை குறித்து தன்னார்வர்லர்களுக்கு பயிற்சி முகாம் நடை பெற்றது.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை தாலுக்காவில் உள்ளகிராமங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் செயல்படும் விதம் குறித்து பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புதிய அரசு தலைமை தாங்கினார்முகாமில் கந்தர்வகோட்டை, அரசம்பட்டி, வடுகப்பட்டி, மங்கனூர், கோமாபுரம், மெய்குடி பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி  

கிராமங்களைச் சேர்ந்த 40 தன்னார்வலர்களுக்குமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பேரிடலிருந்து எவ்வாறு காப்பாற்றுவது
 
என்பது தொடர்பான பயிற்சியினை கந்தர்வகோட்டை தீயணைப்புத்துறை நிலையஅதிகாரி ஆரோக்கியசாமி தலைமையில் காவலர்கள் பயிற்சி அளித்தனர்.

முகாமில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News