செய்திகள்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-14 11:08 GMT   |   Update On 2021-09-14 11:08 GMT
மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வள கொள்ளையை தடுக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பூர்:

மேற்கு தொடர்ச்சி மலையின் வளத்தை பாதுகாக்கவும், கனிமவள கொள்ளையை தடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தி திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரத்னா மனோகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கார்ப்பரேட் நிறுவனத்தினர் அமைக்கும் துறைமுகத்துக்காக தென்காசி, கன்னியாகுமரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனிம வள கொள்ளையை தடுக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தலைமை பேச்சாளர் கிம்லர் கண்டன உரையாற்றினார். மாநில கட்டமைப்பு உறுப்பினர் சண்முகசுந்தரம், மண்டல செயலாளர் சுப்பிரமணியம், லஞ்ச ஒழிப்பு பாசறை செயலாளர் ஈஸ்வரன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இளந்தமிழன் ஷேக் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News