செய்திகள்
மேலப்பாளையத்தில் சாலை விபத்தில் புரோட்டா மாஸ்டர் பலி
மேலப்பாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புரோட்டா மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா. இவரது மகன் மவுலானா(வயது 23). புரோட்டா மாஸ்டர். இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் யாசிக்(20) என்பவரும் கடந்த 17-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் மேலப்பாளையம் ரவுண்டானா அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மவுலானா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். யாசிக்கிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.