செய்திகள்
விபத்து

மேலப்பாளையத்தில் சாலை விபத்தில் புரோட்டா மாஸ்டர் பலி

Published On 2021-04-20 09:41 GMT   |   Update On 2021-04-20 09:41 GMT
மேலப்பாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புரோட்டா மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா. இவரது மகன் மவுலானா(வயது 23). புரோட்டா மாஸ்டர். இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் யாசிக்(20) என்பவரும் கடந்த 17-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் மேலப்பாளையம் ரவுண்டானா அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை மவுலானா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். யாசிக்கிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News