வழிபாடு
கைலாசநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாண வடிவம் திறப்பு
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாண சுதை வடிவத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில், அலங்கார மண்டப சுவரில் ஓவியமாக வரையப்பட்டிருந்த மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சி சுதை வடிவமாக மாற்றி அமைக்க, கோவில் அறங்காவல் குழுவினர் முடிவு செய்து, அதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இப்பணி நிறைவு பெற்றதையொட்டி திறப்பு விழா, நடைபெற்றது. அப்போது மீனாட்சி திருக்கல்யாண சுதை வடிவத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.
முன்னதாக, காலை யாக பூஜைகள் தொடங்கி பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து கலச நீர் புறப்பாடு செய்யப்பட்டு, சுதையின் மேல் தெளித்து தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்பணி நிறைவு பெற்றதையொட்டி திறப்பு விழா, நடைபெற்றது. அப்போது மீனாட்சி திருக்கல்யாண சுதை வடிவத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.
முன்னதாக, காலை யாக பூஜைகள் தொடங்கி பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து கலச நீர் புறப்பாடு செய்யப்பட்டு, சுதையின் மேல் தெளித்து தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.