உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமானார்.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே பெருங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி நித்யா (வயது 35). இவர் தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் அவரது சகோதரர் சத்தியன் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று நித்யா தனது மகன் மகளுடன் நாகர்கோவிலில் நண்பர் வீட்டு நிச்சயதார்த்தத்திற்கு சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து சத்தியன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண் மற்றும் குழந்தைகளை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.