ஆன்மிகம்
ஆதனூரில் புனிதர் செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா
பேராவூரணி ஆதனூரில் உள்ள புனிதர் செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார்.
பேராவூரணி ஆதனூரில் புனிதர் செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆதனூர் பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார்.
இதில் தலைமை அருட்சகோதரி ஏஞ்சல்மேரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ராபர்ட்கிளாரா, மருத்துவ பிரிவு அருட்சகோதரி சசிகலா, செயலாளர் பிரான்சிஸ் கண்டாக், பொருளாளர் ஐசக்நியூட்டன் உள்ளிட்ட சபை மக்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தலைமை அருட்சகோதரி ஏஞ்சல்மேரி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை ராபர்ட்கிளாரா, மருத்துவ பிரிவு அருட்சகோதரி சசிகலா, செயலாளர் பிரான்சிஸ் கண்டாக், பொருளாளர் ஐசக்நியூட்டன் உள்ளிட்ட சபை மக்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.