செய்திகள்
விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்கள்

ஜப்பானை நெருங்கும் ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் ரத்து

Published On 2019-10-12 03:34 GMT   |   Update On 2019-10-12 03:34 GMT
ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஹகிபிஸ் புயல் தாக்க உள்ளதால், சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டோக்கியோ:

ஜப்பானை நெருங்கி வரும் ஹகிபிஸ் புயல் காரணமாக தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்த புயல் கிரேட்டர் டோக்கியோ பகுதி உள்ளிட்ட பசிபிக் கடற்கரையோர பகுதிகளை இன்று மாலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரை கடக்கும்போது கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோசமான வானிலை நிலவுவதால் சர்வதேச விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 1929 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த ஹகிபிஸ் புயலானது 1958-ம் ஆண்டு 1269 பேரை பலி வாங்கிய இடா புயலைப் போன்று சக்திவாய்ந்ததாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News