ஆட்டோமொபைல்
ஆடி

அடுத்தடுத்து மூன்று கார்கள் - ஆடியின் அசத்தல் திட்டம்

Published On 2021-08-10 09:09 GMT   |   Update On 2021-08-10 09:09 GMT
ஆடி நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக திட்டம் தீட்டி புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.


ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி இந்தியாவில் மேலும் மூன்று புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் ஆடி RS5 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு ஆடி அறிமுகம் செய்த ஐந்தாவது மாடல் ஆகும். 



ஆண்டு துவக்கம் முதல் ஆடி A4 பேஸ்லிப்ட், S5 ஸ்போர்ட்பேக், இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் போன்ற மாடல்களை ஆடி இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மேலும் மூன்று புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் திலன் தனியார் நிறுவன உரைடாயலில் சூசகமாக தெரிவித்தார்.

கடந்த மாதம் மூன்று கார்களை அறிமுகம் செய்தோம். மேலும் பல கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என அவர் தெரிவித்தார். எனினும், எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என அவர் தெரிவிக்கவில்லை. தற்போதைய தகவல்களின்படி மூன்றில் ஒரு கார் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News