செய்திகள்
கோப்பு படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர்

Published On 2021-06-09 16:30 GMT   |   Update On 2021-06-09 16:30 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் 407 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் பொன்னையா தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மேற்கொண்ட பெரு முயற்சியின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 407 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 483 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 721 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1540 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 22 பேர் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News