செய்திகள்
தண்ணீர் கலந்து வந்த பெட்ரோலை காணலாம்

பங்கில் பெட்ரோலுடன் கலந்து வந்த தண்ணீர்: மழைநீர் இறங்கியதா?- போலீசார் விசாரணை

Published On 2021-10-23 09:25 GMT   |   Update On 2021-10-23 09:25 GMT
பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அடுத்த தடங்கம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் நேற்று மாலை ஒரு சிலர் பெட்ரோல் போட்டு உள்ளனர்.

அப்போது பெட்ரோலுடன் தண்ணீரும் கலப்படமாக வந்ததால் இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சமயத்தில் சிலர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் போடுமாறு தெரிவித்தனர். அப்போதும் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருவது தெரிந்ததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் ஒரு பாட்டிலில் பெட்ரோலை பிடித்து சோதனை செய்து பார்த்தனர். அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வருவதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெட்ரோல் பங்கை மூடுமாறு ஊழியர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பெட்ரோலில் ஏதும் கலப்படம் செய்தார்களா? அல்லது மழைநீர் உள்ளே இறங்கியதா? என்று விசாரித்து வருகின்றனர்.

பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News