செய்திகள்

சென்னையில் ஓட்டு போட்டார் மு.க.ஸ்டாலின்- அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுகோள்

Published On 2019-04-18 04:47 GMT   |   Update On 2019-04-18 05:38 GMT
பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். #LokSabhaElections2019 #MKStalin
சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்குகள் அமைந்திட வேண்டும். எல்லோரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இது முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது.



500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய்.. சில இடங்களில் அதையும் தாண்டி பணம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதையெல்லாம் மீறி நோட்டுக்கு அடிபணியாமல் வாக்காளர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறேன்.

தேர்தல் ஆணையம் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தேர்தல் ஆணையம் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அதிமுகதான் என்றார்.

நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். உடுமலையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன்,  பண்ருட்டி மேல்குமாரமங்கலத்தில் அமைச்சர் சம்பத், மதுரை அண்ணா நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புதுக்கோட்டை இலுப்பூரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்களித்தனர். #LokSabhaElections2019 #MKStalin
Tags:    

Similar News