செய்திகள்
கோப்பு படம்

கள்ளிக்குடி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை அபேஸ்

Published On 2019-11-07 12:12 GMT   |   Update On 2019-11-07 12:12 GMT
கள்ளிக்குடி அருகே உள்ள வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

கள்ளிக்குடி அருகே உள்ள சோழம்பட்டியைச் சேர்ந்தவர் மதன்குமார். சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவர் மனைவி அதிர்ஷ்ட லட்சுமி (வயது 33) மற்றும் 2 மகன்களுடன் வீட்டின் மொட்டை மாடியில் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அதிர்ஷ்ட லட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை அபேஸ் செய்து விட்டனர்.

காலையில் எழுந்த அதிர்ஷ்டலட்சுமி, நகை மாயமானது கண்டு அதிர்ச்சி யடைந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News