உள்ளூர் செய்திகள்
நகை கொள்ளை

விழுப்புரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு- மர்ம நபருக்கு வலைவீச்சு

Published On 2022-01-18 10:48 GMT   |   Update On 2022-01-18 10:48 GMT
விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் இருந்து 3 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
விழுப்புரம்:

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த கனுவாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்(வயது 38). இவருடைய மனைவி பிரேமா(32), கருணாகரனின் தம்பி சம்பத் மனைவி கல்பனா(35), கருணாகரனின் மகன் நிரஞ்சன்(8) ஆகியோர் ஒரு மொபட்டிலும், கருணாகரன், சம்பத் ஆகியோர் இன்னொரு மோட்டார் சைக்கிளிலும் செஞ்சி தாலுகா மேல்காரணை அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

கண்டமங்கலத்தை அடுத்த பக்கிரிப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், திடீரென பிரேமாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமா திருடன், திருடன் பிடியுங்கள் என கூச்சல் எழுப்பினார். ஆனால் அதற்குள் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தல் தப்பி சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

இது குறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News