செய்திகள்
கொலை

நாச்சியார்கோவில் அருகே முன்விரோத தகராறில் செங்கல் சூளை நடத்தி வந்த முதியவர் வெட்டிக்கொலை

Published On 2021-07-02 10:52 GMT   |   Update On 2021-07-02 10:52 GMT
நாச்சியார்கோவில் அருகே முன்விரோத தகராறில் செங்கல் சூளை நடத்தி வந்த முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவிடைமருதூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த உப்பிலியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் நாச்சியார்கோவில் அருகே உள்ள அய்யாவாடி கட்டுக்கரையில் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை ராஜேந்திரன் வெட்டுக் காயங்களுடன் செங்கல் சூளையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் திருநீலக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ராஜேந்திரனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரடிண மேற்கொண்டனர்.

அப்போது சந்தோஷ்க்கும், ராஜேந்திரனுக்கும் செங்கள் சூளையில் இடப்பிரச்சினை தொடர்பாக முன் பகை இருந்து வந்தது தெரியவந்ததும், இதில் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் சந்தோஷ் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News