செய்திகள்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் கிராமத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் தனிப்படை போலீசார், ஆமூர் கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணி மனைவி மங்கையர்கரசி (வயது 55) , அவரது மகன் சக்திவேல் (28) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மங்கையர்கரசி, சக்திவேல் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் கிராமத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் தனிப்படை போலீசார், ஆமூர் கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணி மனைவி மங்கையர்கரசி (வயது 55) , அவரது மகன் சக்திவேல் (28) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மங்கையர்கரசி, சக்திவேல் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.