ஆன்மிகம்
பரவை நாச்சியார் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

பரவை நாச்சியார் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

Published On 2021-02-21 05:36 GMT   |   Update On 2021-02-21 05:36 GMT
திருவாரூர் திருமஞ்சன வீதியில் உள்ள பரவை நாச்சியார் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் எராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் திருமஞ்சன வீதியில் உள்ள பரவை நாச்சியார் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அகில பாரத அய்யப்ப சேவா சங்க நிர்வாகி முருகேசன் பூஜையை தொடங்கி வைத்தார்.

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், நகர பொதுச்செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணியை சேர்ந்த அமுதா உள்பட பலர் கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கினர். திருவிளக்கு பூஜையில் எராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News