ஆன்மிகம்
தூய கார்மல் மலை அன்னை

வாவறை தூய கார்மல் மலை அன்னை ஆலய விழா நாளை தொடங்குகிறது

Published On 2019-07-11 03:50 GMT   |   Update On 2019-07-11 03:50 GMT
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை தூய கார்மல்மலை அன்னை ஆலய பங்கு குடும்பவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை தூய கார்மல்மலை அன்னை ஆலய பங்கு குடும்பவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலையும், 6 மணிக்கு கொடியேற்றமும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் இயேசு ரெத்தினம் தலைமை தாங்க, வேங்கோடு மறைவட்ட முதல்வர் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார். தினமும் மாலையில் செபமாலை, திருப்பலி, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது. 14-ந்தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமையில் நடக்கிறது. 
Tags:    

Similar News