செய்திகள்
தற்கொலை

பாபநாசம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-26 15:01 GMT   |   Update On 2021-11-26 15:01 GMT
பாபநாசம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:

பாபநாசம் அருகே மட்டையான்திடல் கீழ தெருவில் வசித்து வந்தவர் தினேஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் வயலுக்கு வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் இறந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News