ஆன்மிகம்
கிணத்துக்கடவில் சிவலோகநாதர் கோவில் ஆனி திருமஞ்சனம்

கிணத்துக்கடவில் சிவலோகநாதர் கோவில் ஆனி திருமஞ்சனம்

Published On 2021-07-16 07:13 GMT   |   Update On 2021-07-16 07:13 GMT
கிணத்துக்கடவு சிவலோகநாதர்கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சிவலோகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நடராஜர் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில் கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News