செய்திகள்
பிரதமர் மோடி

பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு- பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2021-04-13 06:30 GMT   |   Update On 2021-04-13 12:38 GMT
யுகாதி, குடிபத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு பிறப்பையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நவராத்திரி தொடங்க இருப்பதற்கும் வாழ்த்து தெரிவித்தார். யுகாதி, குடிபத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

அடுத்த சில நாட்களில் இந்தியா முழுவதும் மக்கள் பல்வேறு விழாக்களை கொண்டாட போகிறார்கள். இந்த பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த சிறப்பான சந்தர்ப்பங்கள் நாடு முழுவதும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் சகோதரத்துவத்தை பரப்பட்டும்.

சேத்தி சந்த் விழாவை கொண்டாடும் சிந்தி சமூகத்திற்கு வாழ்த்துகள். ஜூலேலால் கடவுளின் சிறப்பு ஆசீர்வாதங்கள் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும். வரும் ஆண்டில் அனைவரின் விருப்பங்களும் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். நவ்ரேயின் சிறப்பு நிகழ்வில் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்த வருடமாக இருப்பதற்கும் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் பஞ்சாபில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாவான பைஷாக்கிக்கு மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News