தொழில்நுட்பம்

ரியல்மி 3 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி

Published On 2019-04-11 10:18 GMT   |   Update On 2019-04-11 10:18 GMT
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme3Pro



ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 22 ஆம் தேதி ரியல்மி 3 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இத்துடன் ஸ்மார்ட்போனிற்கான டீசர் ஒன்றையும் ரியல்மி வெளியிட்டுள்ளது. ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதேவ் சேத் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி 3 ப்ரோ இருக்கும் என தெரிவித்திருக்கிறார். 

புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 



முன்னதாக ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய மூன்றே வாரங்களில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக ரியல்மி அறிவித்தது. 

ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க க்ரோமா பூஸ்ட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அ்மசம் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News