ஆன்மிகம்
ஆர்ஜித சேவை

திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவைகள் நிறுத்தி வைப்பு

Published On 2021-04-05 08:19 GMT   |   Update On 2021-04-05 08:19 GMT
கொரோனா தொற்று பரவலால் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 14-ந்தேதியில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் அனைத்து ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடங்கப்படும். இதுகுறித்து பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News