செய்திகள்
ஹரிபிரீத்தா, ஜஸ்வந்த்.

கோவில் குளத்தில் மூழ்கி அண்ணன்-தங்கை பலி

Published On 2021-09-11 06:12 GMT   |   Update On 2021-09-11 06:12 GMT
கோவில் குளத்தில் கால் தவறி விழுந்த அண்ணன், தங்கை இருவரும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜஸ்வந்த் (வயது 8) என்ற மகனும், ஹரிபிரீத்தா (6) என்ற மகளும் இருந்தனர். மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் கிராமத்தில் உள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி மீனாட்சி தனது கணவர், குழந்தைகளுடன் கடாம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார். நேற்று காலை லோகேஸ்வரன், தனது 2 குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றார். அப்போது அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் ஜஸ்வந்த், ஹரிபிரீத்தா இருவரும் கால் தவறி குளத்தில் விழுந்தனர். நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.



Tags:    

Similar News