உள்ளூர் செய்திகள்
மரணம்

அயோத்தியாப்பட்டணத்தில் ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2022-05-07 06:19 GMT   |   Update On 2022-05-07 06:19 GMT
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் ஏரியில் மூழ்சி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தியாப்பட்டணம்:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஏரிக்காடு பகுதியில் உள்ள ஏரியில் நேற்று மாலை 4 மணி அளவில் 4 சிறுவர்கள் குளித்தனர்.

அப்போது திடீரென ஒரு சிறுவன் நீரில் மூழ்கி சத்தம் போட்டான். இதையடுத்து மற்ற 3 சிறுவர்கள் தப்பி ஓடினர்.

இந்த நிலையில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வாழப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கும், காரிப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் போலீசார் உதவியுடன் ஏரியில் தேடினர்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு சிறுவனை பிணமாக மீட்டனர். உடலை கைப்பற்றிய காரிப்பட்டி போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நீரில் மூழ்கி இறந்த சிறுவன் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என தெரியவந்தது.
Tags:    

Similar News