உள்ளூர் செய்திகள்
தற்கொலை

செல்போன் வாங்கி தராததால் விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2021-12-24 10:17 GMT   |   Update On 2021-12-24 10:17 GMT
செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் அன்பு மகள் சாந்தினி (வயது 16). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தினி தனது தாயிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் செல்போன் வாங்கி தர மறுத்து விட்டார்.

இதனால் மனமுடைந்த மாணவி சாந்தினி கடந்த 19-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சாந்தினி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News