செய்திகள்
பாளை அருகே வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
பாளையில் நடந்த வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது
நெல்லை:
பாளை தியாகராஜநகர் பகுதியில் தேர்தல் நிலைக்குழு அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை சோதனை செய்தனர்.
அந்த காரில் தியாகராஜ நகரை சேர்ந்த கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரி சுந்தர் இருந்தார். அவரிடம் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. அவற்றை சோதனை செய்த தாசில்தார் மற்றும் போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பணத்தை அவர்கள் பாளை தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை தாக்கல் செய்து விட்டு பணத்தை பெற்று கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.
இதுவரை நாங்குநேரி தொகுதியில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 லட்சம் வரை பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.