உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Published On 2022-05-06 10:07 GMT   |   Update On 2022-05-06 10:07 GMT
பிரம்மோற்சவ விழா 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
சோளிங்கர்,

ராணிப்பேட்டை மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா மலைக்கோயவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழா 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் 750 அடி மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

பக்தர்கள் சாமி தரிசனம் நேற்று ஊர் கோவிலில் இருந்து பக்தோசிபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி மலைக் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் கொடி ஏற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சோளிங்கர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு யோக லட்சுமி நரசிம்மர் மற்றும் அமிர்தவல்லி தாயார் தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தோசித பெருமாள் தங்க கருட வாகனத்தில் வரும் 10-ந் தேதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனைத் தொடர்ந்து 12-ந்்தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது.

இதில் ஆந்திரா கர்நாடகா தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News