ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-02-28 03:30 GMT   |   Update On 2021-02-27 08:17 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோவில் மாசிக் கொடைவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்தமாதம் (மார்ச்) 9-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை கணபதி ஹோமம், அபிஷேகம், பஜனை, உஷ பூஜை, திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 6.30மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி ஆகியவை நடக்கிறது.

விழாவில் வருகிற 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகா பூஜை, 8-ந்தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 9-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து களப பவனி, 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 5 மணிக்கு திருநடை அடைக்கப்படுகிறது.

5.30 மணிக்கு பூமாலை, பகல் 12 மணிக்கு குத்தியோட்டம், 12.30 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 5 மணிக்கு நடை திறப்பு, இரவு 9 மணிக்கு பக்தி இன்னிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி, 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை, தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
Tags:    

Similar News