செய்திகள்
விபத்து பலி

வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

Published On 2020-09-29 15:06 GMT   |   Update On 2020-09-29 15:06 GMT
வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் எல்.கே.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு என்கின்ற ஆறுமுகம் (வயது 59) தொழிலாளி. இவருக்கு லோகாம்பாள் என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆறுமுகம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வெள்ளகோவில் - மூலனூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News