செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசியில் தேவைகள்- விருப்பங்கள் என்ற வாதம் அபத்தமானது: ராகுல் காந்தி

Published On 2021-04-07 08:21 GMT   |   Update On 2021-04-07 08:21 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என சூழ்நிலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 1-ந்தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

விருப்பம் இருந்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையை பார்க்கும்போது வயதுவந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘‘தேவைகள் - விருப்பங்கள் என்ற விவாதம் அபத்தமானது. ஒவ்வொரு இந்தியரும் தனது வாழ்க்கையை பாதுகாப்பதற்கான வாய்ப்புக்கு தகுதியானவர்கள்.’’ என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் ‘‘நாம் ஏன் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துகிறோம் என்றால், இந்த கட்ட தடுப்பூசிகள் (ஜூலை வரைக்கும்). தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவிற்கு வினியோகம் செய்யப்படும்’’ என்றார்.

இதற்குத்தான் ராகுல் காந்தி அவ்வாறு பதில் அளித்துள்ளார. ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முதல்வர்கள் நாடு தழுவிய அளவில் வயதுவந்தோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News