உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் அதிகரிக்கும் கொரோனா- 73 பேருக்கு தொற்று

Published On 2022-01-05 07:08 GMT   |   Update On 2022-01-05 07:08 GMT
புதுவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:

புதுவையில் 2 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 50, காரைக்காலில் 13, மாகியில் 10 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். 

புதுவையில் 35, காரைக்காலில் 18, மாகியில் 6 பேர் என 59 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். புதுவையில் 7, மாகியில் 2 பேர் என 9 பேர் சிகிச்சை யில்  குணமடைந்து வீடு  திரும்பினர். 

புதுவை  மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 533 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

புதுவையில் 162, காரைக்காலில் 38, ஏனாமில் ஒருவர், மாகியில் 18 பேர் என 219 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  புதுவை மாநிலத்தில் இப்போது 278 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது.  புதுவையில் 2-வது தவணை  உட்பட 14 லட்சத்து 15 ஆயிரத்து 406 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News