செய்திகள்
பாகன்களுடன் யானை

திருவில்லிபுத்தூர் கோவில் யானையை கொடூரமாக தாக்கும் பாகன்: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ...

Published On 2021-02-21 12:07 GMT   |   Update On 2021-02-21 13:26 GMT
சமூக வலைதளங்களில் பாகன் இருவர்கள் திருவில்லிபுத்தூர் கோவில் யானையை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் யானை ஒன்று பாகனால் கொடூரமாக தாக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறதுது. அந்த வீடியோ, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெறும் கோவில் யானை புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை பாகன்கள் கொடூரமாக தாக்கியபோது எடுத்த வீடியோ எனக் கூறப்படுகிறது.

அந்த வீடியோவில் யானையை சங்கிலியால் கட்டி போட்டுள்ளனர். இரண்டு பாகன்கள் யானையின் பின் கால்களில் சரமாரியாக தாக்கும்போது, யார் வலியால் பிளிறிய சத்தம் கேட்போரை பதபதக்கச் செய்கிறது. இதுகுறித்து பாகன்களிடம் கேட்டதாகவும், நாங்கள் குழந்தை போன்று வளர்க்கிறோம். சொல் பேச்சை கேட்டாகததால், இப்படி அடிக்க நேர்ந்தது என்று கூறியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

எப்படி இருந்தாலும் அவர்கள் தாக்கியது மிகவும் கொடூரமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
Tags:    

Similar News